Sunday, August 20, 2023

ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion

கலைஞர் 100 
=============
ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion நாத்திக வாதத்துக்கான அதிமுக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவார்: அமெரிக்காவில் ஒரு வேட்பாளர் தன்னை நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. நாத்திகர்கள் என்றால் 'கெட்டவர்கள்' என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ ஒருவரை 'ஆத்திகர்' என்று சொல்லி விட்டால் அவர் நல்லவராகத்தான் இருப்பார் என்று மக்கள் இயல்பாகவே நம்பி விடுகிறார்கள். பற்பல நூற்றாண்டுகளாக மதங்கள் மக்களிடையே செய்திருக்கும் பிரச்சாரம் இன்றும் அந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது. 

அந்தப் பின்னணியில்தான் கலைஞரின் வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா மத நம்பிக்கைகள் ஆழமாக ஊடுருவி இருக்கும் தேசம். 'பழுத்த ஆத்திகர்' என்றாலே ரொம்ப ரொம்ப நல்லவர் என்ற பிம்பம் மக்களிடையே விரவி இருக்கும் தேசம். நேரு மாதிரி பெரும் மக்கள் செல்வாக்கு கொண்டிருந்த தலைவரே கூட தனது நாத்திக சந்தேகங்களை ஒளித்து வைத்துக் கொண்டுதான் இயங்க வேண்டி இருந்தது. இங்கே கடவுளை மறுதலித்து ஒரு அரசியல்வாதி இயங்குவதே கடினம். அதிலும் தேர்தல் களத்தில் வெற்றிகள் காண்பது வாய்ப்பே இல்லாத சமாச்சாரம். 

அந்த சூழலில்தான் கலைஞர் தன்னைத் தெளிவாக ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு இயங்கினார். 'அம்பாள் என்றைக்கடா பேசி இருக்கிறாள்!' என்ற கலகக்குரலை ஐம்பதுகளிலேயே இங்கே ஒலிக்க விட்டவர். பின்னர் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னரும், வாக்கரசியலில் தொடர்ந்து இயங்கி வந்த பின்னரும் கூட அந்த சித்தாந்தத்தில் முடிந்த அளவு சமரசங்கள் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்துதுமே மக்கள் பல முறை வாக்களித்து அவரை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் ஆத்திகராக இருப்பதற்கும் நல்லவராக இருப்பதற்கும் தொடர்பில்லாத விஷயம் என்று மக்கள் நம்புவதாகவே பார்க்கிறேன். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு மக்களிடையே தெளிவு இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 

அந்த ஆளுமையின் நூறாவது பிறந்த நாளில் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Friday, November 26, 2010

மாபெரும் கிரிக்கெட் திருவிழா

அவினாசி கொங்கு நாடு ஸ்போர்ட்ஸ் அகாடமி  வழங்கும் மாபெரும்  கிரிக்கெட் திருவிழா .. முதல் பரிசு - 5000  + கோப்பை , இரண்டாம் பரிசு - 4000  + கோப்பை , முன்றாம் பரிசு - 2000 , நான்காம் பரிசு - 2000 ...... நுழைவு  கட்டணம் - 500 .... தொடர்புக்கு : 9600711555 ..... கடைசி தேதி : 20 / 12 /2010 .....விரையுங்கள் பரிசை வெல்லுங்கள் ....

Sunday, November 7, 2010

அவிநாசி அத்திக்கடவு திட்டம்

                      அன்னூர் : ""அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன,'' என, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். அவிநாசி அத்திக்கடவு திட்டம் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்னூரின் தெற்கு பகுதிகள் புறக்கணிப்பட்டுள்ளதாக
பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அன்னூர் ஒன்றியத்தை சேர்ந்த பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஆறு ஊராட்சிகளை இதில் சேர்க்க மத்திய அமைச்சர் ராஜா பரிந்துரை செய்தார். இப்பகுதிகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்து வரவேற்பு விழா கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. பச்சாபாளையம் பொதுநல மன்றத் தலைவர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில்,""திட்டத்தை விரைவில் துவக்கினால் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்,'' என்றார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: கொங்கு மண்டலத்தில் 60 ஆண்டுகளாக இந்த திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, பல நிர்வாக, சட்டரீதியான தடைகளால் துவங்காமல் இருந்தது. நிர்வாக சங்கடங்களை மாற்றி இத்திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன. 650 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முடியும்போது 800 முதல் 900 கோடி ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கொள்கைரீதியாக இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.  நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் உலக வங்கியிலிருந்து பெற வேண்டும். மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு பேச வேண்டும். இந்த பயணம் தொடர வேண்டும்.

இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்குள் எதற்கு நன்றி தெரிவிக்கும் விழா என்று மறுத்தேன். ஆனாலும் இத்திட்டத்தை விரைவில் கொண்டு வர ஊக்கம் அளிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல உற்ற தோழனாக இருப்பேன். இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், காளப்பட்டி பேரூராட்சி தலைவர் பையாக் கவுண்டர், தொழிலதிபர்கள் மூர்த்தி, தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை, ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சியில் மின்மயான கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தாய் சேய் பேறுகால பின் சிகிச்சை கட்டட திறப்பு விழா, நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.  கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: மின்மயானம், பெருநகரம் மற்றும் மாநகராட்சிகளில் மட்டுமே அமைக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் கூட இன்னும் அமைக்கவில்லை. ஆனால் சிறுமுகை பேரூராட்சியில் பலதரப்பினரின் உதவியோடு மின்மயானம் அமைப்பது சிறப்பாகும்.

அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி.,களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் வைக்கப்படும் கோரிக்கைகளில் 80 சதவீதம் சுயநலம் சார்ந்திருக்கும்.  20 சதவீதம் தான் பொது நலமாக இருக்கும். சுயநலமும், பொது நலமும் கலந்ததுதான் பொது வாழ்க்கை. இரண்டும் சரியான விகிதத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். 
இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். விழாவில் விஜயலட்சுமி அறிக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், சிறுமுகை பகுதி கைத்தறி குழுமம் தலைவர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர். பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


Saturday, November 6, 2010

அவிநாசி -அருகில் உள்ள ஆலயங்களின் தூரம்

SNOTemple NameDistance
1அவிநாசி (திருப்புக்கொளியூர்)0 கிமீ
2திருமுருகபூண்டி5.31 கிமீ
3திருநணா (பவானி)52.91 கிமீ
4திருப்பாண்டிக்கொடுமுடி68.71 கிமீ
5திருச்செங்கோடு71.65 கிமீ
6வெஞ்சமாக்கூடல்88.61 கிமீ
7கருவூர் (கரூர்)91.86 கிமீ
8திருஈங்கோய்மலை126.03 கிமீ
9திருவாட்போக்கி (ரத்னகிரி)126.35 கிமீ
10திருகடம்பந்துறை128.28 கிமீ
11திருப்பராய்த்துறை145.64 கிமீ
12திருவேடகம்154.06 கிமீ
13திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )155.91 கிமீ
14திருப்பைஞ்ஞீலி155.91 கிமீ
15கற்குடி (உய்யக் கொண்டான் மலை )157.31 கிமீ
16திருமூக்கிச்சரம் (உறையூர்)158.54 கிமீ
17திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்)158.98 கிமீ
18திருச்சிராப்பள்ளி160.86 கிமீ
19திருவானைக்கா161.2 கிமீ
20திருகொடுங்குன்றம் ( பிரான்மலை)165.51 கிமீ
21திருஆப்பனூர்168.05 கிமீ

திருப்புக்கொளியூர் (அவிநாசி)

திருப்புக்கொளியூர் (அவிநாசி)

இறைவர் திருப்பெயர்  : அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், 
      அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்  : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்   : பாதிரி (ஆதியில் மாமரம்) 
தீர்த்தம்    : காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்   : 
தேவாரப் பாடல்கள்  : சுந்தரர் - எற்றான் மறக்கேன்.

தல வரலாறு

  • பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
  • அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.
  • இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
avinaci temple

சிறப்புக்கள்

  • கல்லாலான தீபஸ்(துவஜ)தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
  • காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
  • கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.
  • 1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும்; சந்நிதித்தூண்களிலும் உள்ளன.
  • தீ விபத்துக்குப் பிறகு, அதை ஈடு செய்யும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.
avinaci temple lake


அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

அவிநாசி பற்றி



அவிநாசி (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

பொருளடக்கம்
வரலாறு
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் ஒன்றாகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.2° N 77.28° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
1.     "Avanashi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
2.     "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.



     சிவஸ்தலம் பெயர் :    அவிநாசி (திருப்புக்கொளியூர்)
      இறைவன் பெயர் :      அவிநாசியப்பர்
         இறைவி பெயர் :     கருணாம்பிகை
     எப்படிப் போவது :   கோயமுத்தூரில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கோயமுத்தூர் - திருப்பூர் சாலையில் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் (8 Km) கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
    சிவஸ்தலம் பெயர் :   அவிநாசி (திருப்புக்கொளியூர்)
   மற்றவை   தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
     உங்களிடமிருந்துதேவை    இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் 
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
   ஆலயம் பற்றி :
   கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
    தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக
உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார்
தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா !
ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு காலனையே
    என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.

அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் ஒரு சிறிய கோவிலில் சுந்தரருக்கு சந்நிதி உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவிளையாடல் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms